TNPSC Group 4 முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தேர்வாணையம்
TNPSC Group 4 முக்கிய அறிவிப்பு வெளியிட்ட தேர்வாணையம்
- குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கான 3-ம் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகின்றன நவம்பர் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
- தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கு 6,417 பேரைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையைக் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் நாள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கு செப்டம்பர் ஒன்றாம் நாள் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, நவம்பர் 12ஆம் நாள் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு கடந்த செப்டம்பர் மாதம் முடிந்த நிலையில் தற்பொழுது மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; கடந்த 2019 செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் நவம்பர் 25 தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும் தேர்ச்சி பெற்ற அனைவரும் தங்களுடைய சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வரவேண்டும் எனவும் கூறியுள்ளார்